ஓம் முருகா சரணம் !
இன்று கார்த்திகை நட்சத்திரம் கூடிய நன்னாளில் சங்கரன் மகன் கந்தப் பெருமானை வணங்குவோம்...
இன்று கார்த்திகை நட்சத்திரம் கூடிய நன்னாளில் சங்கரன் மகன் கந்தப் பெருமானை வணங்குவோம்...
ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும்,
நம்பினோர்க்கு அருளும் முருகா...
நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்.... அதை
நான் கண்டு மகிழவேண்டும்....
நம்பினோர்க்கு அருளும் முருகா...
நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்.... அதை
நான் கண்டு மகிழவேண்டும்....
ஊமைக் குழந்தையாம் குமர குருபரன் நாவில்
உயர்ந்த வேல் கொண்டு எழுதி
உணர்வினில் அமுதூறும் கந்தர் கலி வெண்பாவை
உவந்து அளித்த தமிழ்க் கடவுளே!
உயர்ந்த வேல் கொண்டு எழுதி
உணர்வினில் அமுதூறும் கந்தர் கலி வெண்பாவை
உவந்து அளித்த தமிழ்க் கடவுளே!
நக்கீரன் நாவிலே ஆற்றுப்படை பாட
நல்ல தமிழ் தந்த முருகா
நாள்தோறும் உன்புகழைப் பாடிட பாடிட, அதை
நீ கேட்டு மகிழ்ந்த முருகா!
நல்ல தமிழ் தந்த முருகா
நாள்தோறும் உன்புகழைப் பாடிட பாடிட, அதை
நீ கேட்டு மகிழ்ந்த முருகா!
இன்று தாய் இவள் கண்ணீரும் தந்தையின் ரத்தமும்
தன் நெஞ்சம் காண விலையோ?
இங்கு தவழாத பிள்ளையைத் தவழ வைத்தால்..
நீ தந்த தமிழுக்குப் பெருமை முருகா!
தன் நெஞ்சம் காண விலையோ?
இங்கு தவழாத பிள்ளையைத் தவழ வைத்தால்..
நீ தந்த தமிழுக்குப் பெருமை முருகா!
வேலோடும் மயிலோடும் விரைந்தோடி வா
விளையாடும் இளம்பிள்ளை பிணி தீர்க்க வா
எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
எந்தவுரு கொண்டேனும் குறை தீர்க்க வா!
விளையாடும் இளம்பிள்ளை பிணி தீர்க்க வா
எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
எந்தவுரு கொண்டேனும் குறை தீர்க்க வா!
விரைந்தோடி வா வா வா
பிணி தீர்க்க வா வா வா!
செந்தூரில் வா வா வா!
குறை தீர்க்க வா வா வா!
பிணி தீர்க்க வா வா வா!
செந்தூரில் வா வா வா!
குறை தீர்க்க வா வா வா!
No comments:
Post a Comment