பாலும் பழம் உண்டு ... பக்திக்குப் பொருள் உண்டு
தேனும் தினை உண்டு ... தித்திக்கும் தமிழ் உண்டு
தேனும் தினை உண்டு ... தித்திக்கும் தமிழ் உண்டு
ஞானப் பழம் உண்டு ... பழனிமலை மேலே
வேலன் அருள் உண்டு ... வேண்டுவோர் மனம் போல
வேலன் அருள் உண்டு ... வேண்டுவோர் மனம் போல
வேலன் துணை வருவான் ... நாளும் அருள் புரிவான்
வேலுண்டு மயிலுண்டு ... வினை தீர்க்க வழி உண்டு
வேலவன் அருள் உண்டு ... வேண்டிடும் அடியார்க்கு
... வேலன் துணை வருவான்
வேலவன் அருள் உண்டு ... வேண்டிடும் அடியார்க்கு
... வேலன் துணை வருவான்
கூவும் குயில் உண்டு ... குதூகலம் பல உண்டு
தாவும் மான் உண்டு ... மோகனக் கிளி உண்டு
தாவும் மான் உண்டு ... மோகனக் கிளி உண்டு
மாலைப் பொழுதினிலே ... சோலை அழகினிலே
மாலை நில வொளியில் ... பன்னிரு கையோடு
மாலை நில வொளியில் ... பன்னிரு கையோடு
வேலன் துணை வருவான் ... நாளும் அருள் புரிவான்
சந்தனம் மணம் வீசும் ... ஷண்முக நதி உண்டு
சான்றோர்கள் நீராடும் ... சரவணப் பொய்கை உண்டு
சான்றோர்கள் நீராடும் ... சரவணப் பொய்கை உண்டு
சுந்திர வடிவேலன் ... சிங்கார மயில் ஏரி
அன்பர்கள் குறை தீர்க்க ... அருள் என்னும் பொருள் தந்து
வேலன் துணை வருவான் ... நாளும் அருள் புரிவான்
அன்பர்கள் குறை தீர்க்க ... அருள் என்னும் பொருள் தந்து
வேலன் துணை வருவான் ... நாளும் அருள் புரிவான்
வேலுண்டு மயிலுண்டு ... வினை தீர்க்க வழி உண்டு
வேலவன் அருள் உண்டு ... வேண்டிடும் அடியார்க்கு
... வேலன் துணை வருவான்
... நாளும் அருள் புரிவான்.
வேலவன் அருள் உண்டு ... வேண்டிடும் அடியார்க்கு
... வேலன் துணை வருவான்
... நாளும் அருள் புரிவான்.