Tuesday, October 13, 2015

பாலும் பழம் உண்டு ... பக்திக்குப் பொருள் உண்டு
தேனும் தினை உண்டு ... தித்திக்கும் தமிழ் உண்டு
ஞானப் பழம் உண்டு ... பழனிமலை மேலே
வேலன் அருள் உண்டு ... வேண்டுவோர் மனம் போல
வேலன் துணை வருவான் ... நாளும் அருள் புரிவான்
வேலுண்டு மயிலுண்டு ... வினை தீர்க்க வழி உண்டு
வேலவன் அருள் உண்டு ... வேண்டிடும் அடியார்க்கு
... வேலன் துணை வருவான்
கூவும் குயில் உண்டு ... குதூகலம் பல உண்டு
தாவும் மான் உண்டு ... மோகனக் கிளி உண்டு
மாலைப் பொழுதினிலே ... சோலை அழகினிலே
மாலை நில வொளியில் ... பன்னிரு கையோடு
வேலன் துணை வருவான் ... நாளும் அருள் புரிவான்
சந்தனம் மணம் வீசும் ... ஷண்முக நதி உண்டு
சான்றோர்கள் நீராடும் ... சரவணப் பொய்கை உண்டு
சுந்திர வடிவேலன் ... சிங்கார மயில் ஏரி
அன்பர்கள் குறை தீர்க்க ... அருள் என்னும் பொருள் தந்து
வேலன் துணை வருவான் ... நாளும் அருள் புரிவான்
வேலுண்டு மயிலுண்டு ... வினை தீர்க்க வழி உண்டு
வேலவன் அருள் உண்டு ... வேண்டிடும் அடியார்க்கு
... வேலன் துணை வருவான்
... நாளும் அருள் புரிவான்.

Monday, October 12, 2015

மருவும் அடியார்கள், மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர் காமப் பெருமாள் காண்!!

முத்தான முத்துக் குமரா ... முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக் குமரா ... சிந்தை மகிழ வா வா வா
நீ ஆடும் அழகைக் கண்டு ... வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு ... மயிலாடி மகிழுதையா
மயிலாடும் அழகைக் கண்டு ... மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு ... மக்கள் கூட்டம் ஆடுதையா
பன்னீரில் குளிக்கவைத்து ... பட்டாடை உடுத்திவைத்து
சந்தனத்தில் சாந்தெடுத்து ... அங்கமெல்லாம் பூசிவைத்து
நீர்ப்பூசி திலகம் வைத்து ... நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலரால் உன்னை ... அர்ச்சிப்போம் வருவாய் அப்பா...

Friday, October 9, 2015

பால் மணக்குது ... பழம் மணக்குது ... பழனி மலையிலே...
பாரைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
பழனி மலையைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே ... அப்பப்பா
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே
எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே
தேன் இருக்குது ... தினை இருக்குது ... தென் பழனியிலே
முருகா
தேன் இருக்குது ... தினை இருக்குது ... தென் பழனியிலே
தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்
சக்கரக் காவடி சந்தனக் காவடி சேவற் காவடியாம்
சர்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம்
மலையைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
வேலனுக்கு ... அரோகரா
முருகனுக்கு ... அரோகரா
கந்தனுக்கு ... அரோகரா
அதோ வராண்டி பழனி ஆறுமுகன் தாண்டி
அவன் போனா போராண்டி முருகன் தானா வாராண்டி
வேல் இருக்குது ... மயில் இருக்குது ... விராலிமலையிலே
அந்த விராலிமலையிலே
மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்
விராலி மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே..

Thursday, October 8, 2015

தணிகைமலை பெருந்துறையே ... வா வா வா
தயாநிதியே தர்மதுரையே ... வா வா வா
அடியவர்க்கு அருளும் அரசே ... வா வா வா
ஆலமுண்டோன் பாலகனே ... வா வா வா
பிறவிப் பிணியை தீர்க்கும் மருந்தே ... வா வா வா
ஆறுமுக கருணைக் கோவே ... வா வா வா
என் ஆவி பிரியும் சமயம் முன்னே ... வா வா வா
பாவி என்னை மறந்திடாதே ... வா வா வா
வேல் பிடிக்கும் செஞ்சுடரே ... வா வா வா
வேல் எடுத்து வினைய தீர்க்க ... வா வா வா
என் மரண பயம் தீர்க்க நீயும் ... வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி ... வா வா வா
திருத்தணிகைமலை, சுவாமிமலை, பழனிமலை சோலைமலை பெருந்துறையே ... வா வா வா
தயாநிதியே தர்மதுரையே ... வா வா வா...



Tuesday, October 6, 2015

கந்தனும் வருவான் ... காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் ... மனமே..
கனவிலும் நினைவிலும் ... அவன் திரு நாமத்தை
மறவாமல் நீ இருப்பாய் ... மனமே ... மறவாமல் நீ இருப்பாய்
சிக்கலில் வேல் எடுத்தான் ... சிங்கார வேலனானான்
செந்தூரில் போர் புரிந்தான் ... சூரனையே வதைத்தான்
சரவணன் அவனே ... ஷண்முகன் அவனே
சிவசக்தி வடிவானவன் ... முருகன் ... சிவசக்தி வடிவானவன்
தணிகையிலே அமர்ந்தான் ... தத்துவங்கள் சொன்னான்
தந்தைக்கு குருவானான் ... தமிழுக்குத் துணையானான்
தரணியில் புகழோடு ... திருமறைகள் போற்ற
சுவாமிமலையில் நின்றான் ... தகப்பன் ... சாமியாக நின்றான்
பழமதைக் கேட்டான் ... பழநியிலே அமர்ந்தான்
பக்தர்களை அழைத்தான் ... அருள் ஞானப் பழம் தந்தான்
பழமுதிர் சோலையில் ... அழகுடன் அமர்ந்தான்
பரங்குன்றில் மணமாலை சூட்டிக்கொண்டான் ...
திருப்பரங்குன்றில் மணமாலை சூட்டிக்கொண்டான்..
கந்தனும் வருவான் ... காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் ... மனமே..