மருவும் அடியார்கள், மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர் காமப் பெருமாள் காண்!!
மரகத மயூரப் பெருமாள் காண்!
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர் காமப் பெருமாள் காண்!!
முத்தான முத்துக் குமரா ... முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக் குமரா ... சிந்தை மகிழ வா வா வா
சித்தாடும் செல்வக் குமரா ... சிந்தை மகிழ வா வா வா
நீ ஆடும் அழகைக் கண்டு ... வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு ... மயிலாடி மகிழுதையா
மயிலாடும் அழகைக் கண்டு ... மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு ... மக்கள் கூட்டம் ஆடுதையா
பன்னீரில் குளிக்கவைத்து ... பட்டாடை உடுத்திவைத்து
சந்தனத்தில் சாந்தெடுத்து ... அங்கமெல்லாம் பூசிவைத்து
நீர்ப்பூசி திலகம் வைத்து ... நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலரால் உன்னை ... அர்ச்சிப்போம் வருவாய் அப்பா...
வேலாடும் அழகைக் கண்டு ... மயிலாடி மகிழுதையா
மயிலாடும் அழகைக் கண்டு ... மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு ... மக்கள் கூட்டம் ஆடுதையா
பன்னீரில் குளிக்கவைத்து ... பட்டாடை உடுத்திவைத்து
சந்தனத்தில் சாந்தெடுத்து ... அங்கமெல்லாம் பூசிவைத்து
நீர்ப்பூசி திலகம் வைத்து ... நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலரால் உன்னை ... அர்ச்சிப்போம் வருவாய் அப்பா...
No comments:
Post a Comment