கந்தனும் வருவான் ... காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் ... மனமே..
கவலையை நீ விடுவாய் ... மனமே..
கனவிலும் நினைவிலும் ... அவன் திரு நாமத்தை
மறவாமல் நீ இருப்பாய் ... மனமே ... மறவாமல் நீ இருப்பாய்
மறவாமல் நீ இருப்பாய் ... மனமே ... மறவாமல் நீ இருப்பாய்
சிக்கலில் வேல் எடுத்தான் ... சிங்கார வேலனானான்
செந்தூரில் போர் புரிந்தான் ... சூரனையே வதைத்தான்
செந்தூரில் போர் புரிந்தான் ... சூரனையே வதைத்தான்
சரவணன் அவனே ... ஷண்முகன் அவனே
சிவசக்தி வடிவானவன் ... முருகன் ... சிவசக்தி வடிவானவன்
சிவசக்தி வடிவானவன் ... முருகன் ... சிவசக்தி வடிவானவன்
தணிகையிலே அமர்ந்தான் ... தத்துவங்கள் சொன்னான்
தந்தைக்கு குருவானான் ... தமிழுக்குத் துணையானான்
தந்தைக்கு குருவானான் ... தமிழுக்குத் துணையானான்
தரணியில் புகழோடு ... திருமறைகள் போற்ற
சுவாமிமலையில் நின்றான் ... தகப்பன் ... சாமியாக நின்றான்
சுவாமிமலையில் நின்றான் ... தகப்பன் ... சாமியாக நின்றான்
பழமதைக் கேட்டான் ... பழநியிலே அமர்ந்தான்
பக்தர்களை அழைத்தான் ... அருள் ஞானப் பழம் தந்தான்
பக்தர்களை அழைத்தான் ... அருள் ஞானப் பழம் தந்தான்
பழமுதிர் சோலையில் ... அழகுடன் அமர்ந்தான்
பரங்குன்றில் மணமாலை சூட்டிக்கொண்டான் ...
திருப்பரங்குன்றில் மணமாலை சூட்டிக்கொண்டான்..
பரங்குன்றில் மணமாலை சூட்டிக்கொண்டான் ...
திருப்பரங்குன்றில் மணமாலை சூட்டிக்கொண்டான்..
கந்தனும் வருவான் ... காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் ... மனமே..
கவலையை நீ விடுவாய் ... மனமே..
No comments:
Post a Comment