Thursday, October 8, 2015

தணிகைமலை பெருந்துறையே ... வா வா வா
தயாநிதியே தர்மதுரையே ... வா வா வா
அடியவர்க்கு அருளும் அரசே ... வா வா வா
ஆலமுண்டோன் பாலகனே ... வா வா வா
பிறவிப் பிணியை தீர்க்கும் மருந்தே ... வா வா வா
ஆறுமுக கருணைக் கோவே ... வா வா வா
என் ஆவி பிரியும் சமயம் முன்னே ... வா வா வா
பாவி என்னை மறந்திடாதே ... வா வா வா
வேல் பிடிக்கும் செஞ்சுடரே ... வா வா வா
வேல் எடுத்து வினைய தீர்க்க ... வா வா வா
என் மரண பயம் தீர்க்க நீயும் ... வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி ... வா வா வா
திருத்தணிகைமலை, சுவாமிமலை, பழனிமலை சோலைமலை பெருந்துறையே ... வா வா வா
தயாநிதியே தர்மதுரையே ... வா வா வா...



No comments:

Post a Comment