Wednesday, September 30, 2015

நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே ... முருகனென்றால்
நிகரில்லாத பக்தி பெருகுமே...
வினைத்துயரம் யாவும் விலகுமே ...
வேலனென்றால்
விளங்கும் செல்வம் வீட்டில் நிறையுமே
துதிக்கத் துதிக்கப் பாவம் தொலையுமே ... கந்தனென்றால்
தூய ஞான மேன்மை நிலவுமே
எதிர்க்கும் பகை அச்சம் நீங்குமே
எதிர்க்கும் பகை அச்சம் நீங்குமே ... கடம்பனென்றால்
எடுத்த செயல் வெற்றி ஓங்குமே
இனிக்கும் தேன்போல் இதயம் ஆகுமே ... குகனென்றால்
என்றும் வாழ்க்கைப் புனிதம் சேருமே
மணக்கும் மலர்போல் மகிழ்ச்சி பொங்குமே ... குமரனென்றால்
மாசில்லாத அருள் வழங்குமே...
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே ... முருகனென்றால்
நிகரில்லாத பக்தி பெருகுமே...
வினைத்துயரம் யாவும் விலகுமே ... . வேலனென்றால்
விளங்கும் செல்வம் வீட்டில் நிறையுமே...

ஓம் சரவண பவ ஓம்.


No comments:

Post a Comment